Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திருக்கோவில் பிரதேசத்தில் பாரிய கடல் அரிப்பு

திருக்கோவில் பிரதேசத்தில் பாரிய கடல் அரிப்பு

1 minutes read

திருக்கோவில் பிரதேசத்தில் பாரிய கடல் அரிப்பு இடம்பெற்று வருகிறது. தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்துக்கு முன்னாலுள்ள கடல் பகுதி மற்றும் திருக்கோயில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்னால் உள்ள கடல் பகுதிகள் கடலரிப்புக்கு இலக்காகி வருகின்றன.

கடந்த சில வார காலமாக இடம்பெற்று வரும் இந்த கடல் அரிப்பில் நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் அடித்துச் செல்லப்பட்டு இருக்கின்றன. அது போல ஏனைய மரங்களையும் கடல் காவு கொண்டிருக்கிறது. சுமார் 100 அடி தூர நிலப்பகுதி கடலுக்குள் காவுகொள்ளப்பட்டு இருக்கின்றது.

மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்களது மீன்பிடி வள்ளங்கள் கரையை விட்டு நகர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடலரிப்பை தடுத்து நிறுத்த உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More