0
களனி பல்கலைக்கழகத்துக்கு அருகில் இன்று (19) மாலை மாணவர்கள் குழுவொன்றால் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்கப் பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர்.
அத்துடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களுள் 4 பிக்குகளும் அடங்குகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.