Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தெற்கில் மசாஜ் நிலைய உரிமையாளர் சுட்டுப் படுகொலை!

தெற்கில் மசாஜ் நிலைய உரிமையாளர் சுட்டுப் படுகொலை!

0 minutes read

இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் மசாஜ் நிலையத்தை நடத்தி வரும் நபரே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய எஸ்.சஞ்சீவ என்ற நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வீட்டு வாசலில் வைத்துக் கைத்துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே அவரைச் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர் என்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More