அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட ராணுவ தளத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோமாலியாவை அண்மித்துள்ள லமு கவுன்டியில் இருக்கும் மாண்டா பே தளத்தை அமெரிக்க ராணுவமும், கென்ய ராணுவம் பயன்படுத்தி வருகின்றன. அந்த தளத்தின் மீது சோமாலியாவை சேர்ந்த அல்கொய்தா ஆதரவு அல் சாபாப் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் முகமூடி அணிந்துவந்து அதிகாலை திடீர் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இதன் போது பயங்கரவாதிகள் 4 பேரும் கொல்லப்பட்டு விட்டதாக கென்ய ராணுவம் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு பொறுப்பேற்று அதுதொடர்பான படத்தை வெளியிட்டுள்ள அல் சாபாப் அமைப்பு, 7 போர் விமானங்கள், 3 ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளது.