கொரோனா பரவல் சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான ஓட்டுப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். துணை அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 120க்கும் அதிகமான வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 90க்கும் அதிகமான வாக்குகளுடன் பின்தங்கி உள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க், வெர்மான்ட், மசாசூட்ஸ், நியூஜெர்சி, கனக்டிகட், டெலவர் மாநிலங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல் டொனால்டு டிரம்ப் ஓக்லஹாமா, கென்டக்கி, இண்டியானா, டென்னிஸி, மேற்கு வெர்ஜினியா மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார்.