இலங்கையில் கொரோனாத் தொற்று உடையவர்கள் என நேற்று (24) இரவில் இருந்து இன்று (25) மாலை 4.30 வரை யாரும் கண்டறியப்படவில்லை என சுகாதார அமைச்சு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
இதுவரை கொரோனா தொற்று சந்தேகத்தில் 255 பேரும், கொரோனாத் தொற்று உடையவர்களாக 102 பேரும் காணப்பட்டனர். அதிலும் மூன்று பேர் குணமாகி வீடு திரும்பியதால் எண்ணிக்கை 99 ஆக குறைந்துள்ளது.
மேலும், வடபகுதியில் யாழ் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட 7 பேருக்கும் கொரோனாத் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.