அழகான பொழுதுகளாய்
உங்கள் நினைவுகள் சுமந்த நடக்கின்றோம்- நாங்கள்
ஈழக்கனவை இதயத்தில் சுமந்து
இளமை வாழ்வைத்துறந்த-எம்
உள்ளம் நிறைந்த கடவுள் நீங்கள்
கார்த்திகை தீபமாய்
பார்போற்றும் தெய்வமாய்
ஊர்போற்றும் உத்தமர்கள் நீங்கள் உங்களை நாங்கள் என்றும் மறவோம்…
தேசத்தலைமையின் வழித்தடம் தவறாத- தேசக்குழந்தைகள்
நீங்கள்
நேசம்மறவா மக்களின் உள்ளம் நிறைந்த உன்னத வீரக்குழந்தைகள் நீங்கள்
உங்களை நாம் மறவோம்…
ஈழம் மலரும்
இதயம் நிறையும் -என்ற
காலப்பொழுது கனவினை சுமந்த
கார்த்தீகை தீபங்கள் நீங்கள்
உங்களை நாம் என்றும் மறவோம்..
காலப்பொழுதில் காத்திருந்தோம்
உங்கள் வாசல் வர- கல்லறைத்தீபங்களே!
கண்ணுறங்கள் -என்றோ ஒரு நாள் விடியும்
உங்களை நாம் என்றும் மறவோம்…
வீரக்குழந்தைகளே! விடுதலைக்கனவு சுமந்த
தேசப்புதல்வர்களே!
பாசப்புதல்வர்களே! -இந்த
பார்முழுவதும் உங்கள் நினைவுகள் சுமந்து
நெஞ்சம் மறவாது
நினைவுடன்-நாங்கள்
நின்மதியாய் உறங்குங்கள்
கார்த்திகை தீபங்கள்
கல்லறை தெய்வங்களே!
உங்களை மறவோம்-என்றும்
உங்கள் நினைவுடன்
உருத்திரபுரம்- விமல்