May 31, 2023 5:19 pm

காலை அருந்தும் நீரின் அவசியம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

► காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் முதலில் வயிற்றில் உள்ள நச்சுகள் வெளியேறுகிறது. குடல் சுத்தமாகிறது. இதனால் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் மலம் கழிக்க முடிகிறது. நல்ல ஆரோக்கியத்திற்கு உடலில் உள்ள கழிவுகளை தினமும் வெளியேற்ற வேண்டும்.

► தண்ணீரானது உடல் முழுவதும் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுவதால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தண்ணீர் எடுத்துக்கொள்வது நல்லது. பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதாலே பின்னாளில் பல விளைவுகள் ஏற்படுகின்றன. இதனால், உடலில் நீர்ச்சத்தை சரியான அளவில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

► காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், உடல் எடை குறையும். உணவு செரிமானத்தைத் தூண்டும்.

► அதேபோன்று சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னும் சூடான/வெதுவெதுப்பான நீரை குடிப்பது மிகவும் நல்லது.

► அதிகளவு தண்ணீர் குடிப்பதால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். சோர்வான உடலியல் செயல்பாடுகள் சுறுசுறுப்பாக இயங்கும். இதனால், எந்தவொரு வேலையையும் எளிதாக செய்ய முடியும். மேலும், உடல் உறுப்புகள் சீராக இயங்குவதால், ரத்த ஓட்டம் நன்றாக இருப்பதாலும் முகமும் பொலிவு பெறும்.

► எனவே, நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு காலையில் எழுந்தவுடனும், மற்ற நேரங்களிலும் அதிக தண்ணீர் குடிப்பது அவசியம்.

► அதிகபட்சமாக உடல் எடை கொண்டவர்கள், அதிகமாக வியர்வையை வெளியேற்றுபவர்கள் காலையில் மட்டுமே அதிகபட்சமாக 1 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். தண்ணீருடன் சிறிது எலுமிச்சைச் சாறு, இஞ்சிச்சாறு சேர்த்தும் குடிக்கலாம்.

► சாதாரணமானவர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 3 லிட்டர் அல்லது 8 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதற்கும் குறைவாக தண்ணீர் குடித்தால் உடல் சோர்வில் இருந்து சிறுநீரகம் வரை பல தொந்தரவுகள் ஏற்படும்.

-சுகாதார குறிப்பேடு-

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்