அண்மையில் வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால்கிட்டத்தட்ட 1250குடும்பங்கள் பாதிக்கப்பட்டன இவற்றில் பாதிக்கப்பட்டு இதுவரைஉரிய வெள்ள நிவாரணம் கிடைக்காத மக்களை இனம் கண்டு அவர்களுக்கான உலர்உணவு நிவாரணத்தை இலங்கை வங்கி முகாமைத்துவம் கொடுப்பதற்காகமுன்வந்தது.
இவற்றுள் மன்னார் மாவட்டம் முல்லைத்தீவுமாவட்டம் வவுனியா மாவட்டம்போன்றவை இனம் காணப்பட்டன.
வவுனியாமாவட்டத்தில் மகா இறம்பைக்குளம் மற்றும் பொன்னாவரசன் குளம்போன்ற கிராமங்களில் வசிக்கும் பாதிக்கப்பட்ட மக்களை முறையே கிராமஅபிவிருத்திச்சங்கம் மற்றும் கிராம சேவையாளர்களின் உதவியுடன்இனங்காணப்பட்டு வவுனியா இலங்கை வங்கி நகர கிளை முகாமையாளர்திரு.மா.றோய் ஜெயக்குமாரும் சகஊழியர்களும் நிவாரண உலர் உணவுபொருட்களை அன்பளிப்பு செய்வதை படங்களில் காணலாம்.