Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முதல் தமிழ்ப் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி காலமானார்!

முதல் தமிழ்ப் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி காலமானார்!

0 minutes read

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் (வயது 78) காலமானார்.

இவர் இலங்கையின் முதல் தமிழ்ப் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி என்பதுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வடக்கு மாகாணத்துக்கான தலைவராகவும் செயற்பட்டார்.

யாழ். சட்டத்தரணிகள் சங்கத்தின் நீண்டகாலத் தலைவியாக இருந்த அவர், யாழ். மாவட்டத்தில் நீதிமன்றங்களின் மேம்படுத்தல்களிலும் சட்டத்தரணிகளின் நலன்களிலும் அக்கறையுடன் செயற்பட்டார்.

சிறந்த சமூக சேவையாளரான இவர், சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலக்கப்பட்ட வழக்கில் பொதுமக்கள் சார்பில் இலவசமாக வழக்கை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More