நாடற்றவர்களான சக்மா இன மக்களும்…
பங்களாதேசில் தொடரும் இன-மத வன்முறையும்…
——————————————————
ஆக்கியோன் – ஐங்கரன் விக்கினேஸ்வரா
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் வாழும் மிகப்பெரிய இனமான ‘சக்மா மக்கள் (Chakma people) தென்கிழக்கு பங்காளதேசத்தின் சிட்டகாங் மலைத்தொடர்களை் ( சிட்டகாங் ஹில் டிராக்ட்ஸ் – CHT) பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
அத்துடன் திரிபுரா, மிசோரம், அசாம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் சக்மா பழங்குடியினரும் வாழ்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் பௌத்தர்கள்.
சக்மா, மர்மா, டிப்பராஸ், சக், முருங், குமி, லுஷாய், போம், பான்கோ மற்றும் மோக் உட்பட குறைந்தது 10 இன சிறுபான்மையினர் இந்த சிட்டகாங் மலைத்தொடர்களில் வாழ்கின்றனர்.
5,138 சதுர மைல் பரப்பளவில் பரவியுள்ள இப்பகுதி வடக்கே திரிபுரா, தெற்கில் மியான்மரின் அரக்கான் மலைகள், மிசோரமின் லுஷாய் மலைகள் மற்றும் கிழக்கில் மியான்மரின் அரக்கான் மலைகள் மற்றும் மேற்கில் சிட்டகாங் மாவட்டத்தால் இணைக்கப்பட்டுள்ளது.
சக்மாமக்கள் (Chakma people)
பெரும்பான்மையான பங்காளதேசத்தின் சிட்டகாங் மலைப்பகுதிகளிலும் மற்றும் மியான்மர் நாட்டின் மலைப்பகுதிகளிலும், கிழக்கு இந்தியாவின் அசாம், திரிபுரா, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் மாநிலங்களிலும் வாழும் பழங்குடி மக்களே இவர்கள் ஆவார்.
1971 பங்காளதேச விடுதலைப் போரின் போது ஆயிரக்கணக்கான சக்மா பழங்குடி மக்கள் சிட்டகாங் பகுதிகளிலிருந்து இந்தியாவின் திரிபுரா, மிசோரம் மாநிலங்களில் அகதிகளாக குடியேறினர்.
சிட்டகாங்மலைத்தொடர்பிணக்குகள்:
இம்மக்கள் தேரவாத பௌத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இம்மக்கள் சக்மா மொழி, வங்காள மொழி மற்றும் இந்தி மொழிகளை பேசுகின்றனர். சக்மா பழங்குடி மக்கள் 31 குடிகளாக பிரிந்துள்ளனர்.
மேலும் திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழுக்களில் சக்மா பழங்குடி மக்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.
சிட்டகாங் மலைத்தொடரில் வாழும் சக்மா பழங்குடி மக்களுக்கும், பங்காளதேச இசுலாமியர்களுக்கும் 1977-ஆம் ஆண்டில் பிணக்குகள் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வன்முறையில் பல நூற்றுக்கணக்கான சக்மா மக்கள் கொல்லப்பட்டனர். பின்னர் இரு பிரிவினருக்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டது.
சக்மாக்களுக்குஎதிரானஅடக்குமுறை:
கடந்ந ஏழு தசாப்தங்களாக, பழங்குடியின மக்களை சக்மாஸ் உட்பட – அவர்கள் பாதுகாப்புப் படைகள், அரசியல் பிரிவுகள் மற்றும் நில அபகரிப்பாளர்களிடமிருந்து அடக்குமுறையை எதிர்கொள்வதாக குற்றம் சாட்டுகின்றனர்.
சக்மா மக்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக இருப்பதாகவும்,கிழக்கு பாகிஸ்தான் உருவான நேரத்தில் இந்தியாவுடன் இணைய விரும்பியதாகவும் அறியப்பபடுகிறது.
ஆகஸ்ட் 17 – கருப்புதினம் :
சக்மா மக்கள் ஆகஸ்ட் 17 ஐ ‘கருப்பு தினமாக’ அனுசரித்து வருகின்றனர். சக்மா நேஷனல் கவுன்சில் ஆஃப் இந்தியா (CNCI) படி, சக்மாஸ் ஆகஸ்ட் 17, 1947 அன்று துக்கம் அனுசரிக்கின்றனர். அப்போது சக்மா பிராந்தியம் அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு, இப்போதய வங்காளதேசத்திற்கு வழங்கப்பட்டது.
இந்தியா சுதந்திரம் பெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் இப்பகுதியை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக சேர்க்கும் முடிவு அறிவிக்கப்பட்டது.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் சக்மாக்களின் பிரச்சனைகளை தீர்க்க 2014 ஆம் ஆண்டு சக்மா தேசிய சபை நிறுவப்பட்டது. 2016 இல் கவுகாத்தியில் நடைபெற்ற முதல் மாநாட்டில், சக்மா மக்கள் ஆகஸ்ட் 17 ஐ ‘கருப்பு தினமாக’ அனுசரிக்க முடிவு செய்திருந்தனர்.
நாடற்றவர்களானசக்மாமக்கள் :
1947இல் முஸ்லிம்கள் பெரும்பான்மையான பகுதிகள் பாகிஸ்தானிலும், முஸ்லீம்கள் அல்லாத பெரும்பான்மையான பகுதி இந்தியாவிற்கும் என இருநாட்டுக்கும் சுதந்திரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரிட்டிஷ் காலனி அரசு இறுதியாக ஏற்றுக்கொண்டது.
சக்மா மக்கள் பெரும்பான்மையாகக் கருதப்பட்ட 98.5% இன மலைப் பழங்குடியினரை உள்ளடக்கிய, முஸ்லீம் அல்லாத மக்கள்தொகை கொண்ட பகுதியாக இருந்ததால், அப்போது பிரிக்கப்படாத இந்தியாவின் சிட்டகாங் மலைப் பகுதி இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும்.
கிழக்கு பாகிஸ்தானுடன் இணைத்த அநியாயமான முடிவுக்கு எதிராக சிட்டகாங் மலைப் பகுதி மக்களும் அதன் தலைவர்களும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அதன் தலைவர்கள்இப்பகுதியை இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டாலும், இந்தியத் தலைவர்கள் அவ்வேளியில் முனைப்புடன் செயல்படவில்லை.
எனவே, சக்மா தேசிய சபையின் முயற்சிகளும் முன்முயற்சியும், சக்மாஸ் பிரிவினையின் மோசமான பலிகடாக்களில் ஒருவராக இருந்துள்ளார்கள். இது அவர்களை நாடற்றவர்களாகவும், உலகிலேயே மிகவும் பாகுபாடு மற்றும் துன்புறுத்தப்பட்ட இனங்களில் ஒன்றாகவும் ஆக்கியுள்ளது.
சக்மா தலைவர்கள் இந்தியாவுடன் இணைக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர், அதற்காக எங்கள் தலைவர்கள் லெப்டினன்ட் சினேகா குமார் சக்மா மற்றும் லெப்டினன்ட் காமினி மோகன் திவான் ஆகியோர் ஜவஹர்லால் நேரு மற்றும் சர்தார் வல்லபாய் படேல் போன்ற தேசிய தலைவர்களை சந்திக்க புது தில்லிக்கு பல பயணங்களை மேற்கொண்டனர்.
எல்லைபிரச்சனை :
பங்களாதேஷும், இந்தியாவும் 4096 கி.மீ தங்கள் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இவ்வெல்லையானது மொத்தம் ஐந்து மாநிலங்கள், மேற்கு வங்காளம், அசாம், மேகாலயா, திரிபுரா, மற்றும் மிசோரமை கடந்து செல்கிறது.
இந்திய பங்களாதேஷ் உறவுகளில் உள்ள முக்கிய பிரச்சனையாக, பெரும்பாலும் இந்திய மாநிலமான திரிபுராவில் தஞ்சம் புகுந்துள்ள சக்மா அகதிகளின் பிரச்சனையே உள்ளது.
1994 இல் நடந்த பேச்சுவார்த்தைகள் திரிபுராவில் இருந்து பங்காளதேசத்தில் உள்ள சிட்டகாங் மலைப் பகுதிகளுக்கு சக்மா அகதிகளை திருப்பி அனுப்ப வழிவகுத்தது. அவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
சிலர் இன்னும் நாடு திரும்புவதற்காக காத்திருக்கிறார்கள். குடியேறியவர்களின் மற்றொரு சிக்கலை இந்தியா எதிர்கொள்கிறது, அவர்களில் பெரும்பாலோர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குடியேறிய பலவீனமான பிரிவைச் சேர்ந்தவர்கள்.
10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் என மதிப்பிடப்பட்ட அவர்களின் எண்ணிக்கை இந்தியப் பொருளாதாரத்துக்குச் சுமையாக இருக்கிறது என்பதும் உண்மையே. இந்தியா பலமுறை கோரிக்கை விடுத்தும், மங்காளதேச அரசு அவர்களை திரும்ப அழைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வரலாற்றில்வங்கம்தராதபாடம் :
ஆகஸ்ட் 1947 இல் பிரிட்டிஷ் இந்தியா மத அடிப்படையில் இரண்டு சுதந்திர நாடுகளாக பிரிக்கப்பட்டது – இந்திய யூனியன் மற்றும் பாகிஸ்தான். முஸ்லீம் மக்கள் வசிக்கும் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் பாகிஸ்தானுக்கு சென்றன. கிழக்கே பங்காளத்தை உருவாக்கியது (1955 முதல் – கிழக்கு பாகிஸ்தான்).
அங்கே ஒரு சமமற்ற பொருளாதார மற்றும் அரசியல் நிலையை ஆக்கிரமித்துள்ளது (முழு நாட்டின் மக்கள்தொகையில் 1/2 க்கும் மேற்பட்டோர் அதில் வாழ்ந்தாலும்). கிழக்கு பாகிஸ்தானில் யாரும் பேசாத நாட்டின் ஒரே உத்தியோகபூர்வ மொழியான உருதுவை உருவாக்க மத்திய அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியால் பெங்காலி தேசியவாதத்தின் எழுச்சி தூண்டப்பட்டது.
1954 இல் பாகிஸ்தானின் மாநில மொழியாக உருதுவுடன் பெங்காலி அங்கீகரிக்கப்படுவதற்கு பல வருட சூடான விவாதங்கள் மற்றும் இரத்தக்களரி மோதல்கள் எழுந்தன.
கிழக்கு பாகிஸ்தானின் மக்கள் தங்கள் நிதி நிலைமை, அரசியல் பாகுபாடு ஆகியவற்றின் அதிருப்தியால், தேசிய உரிமைகளை விரிவுபடுத்துவதற்கான இயக்கத்தை ஏற்படுத்தினர். பின்னர் அவர்களின் சொந்த தேசத்தை 1949 இல் “அவாமிலிக்” (“மக்கள் லீக்”) தலைமையில் உருவாகியது.
1966 ஆம் ஆண்டில், அதன் தலைவர் ஒரு முக்கிய அரசியல் பிரமுகர், மாகாணத்தின் பரந்த உரிமைகளின் ஆதரவாளர், ஷேக் முஜிபுர் ரஹ்மானின். அவாமி லீக் வெற்றி பெற்றார். டிசம்பர் 1970 பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு நிலைமை கடுமையாக அதிகரித்தது.
முக்திபாஹினிஎழுச்சி:
பாகிஸ்தான் துருப்புக்களுக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் (“முக்தி பாஹினி”) மோதல்கள் தீவிரமாக இருந்தன. அகதிகள் கூட்டம் இந்தியாவுக்கு விரைந்தது. பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளின் அடக்குமுறைக்கு பதிலளிக்கும் விதமாக, மார்ச் 26, 1971 அன்று, இந்திய உதவியுடன் பங்களாதேஷ் என்ற புதிய நாட்டின் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.
இந்திய இராணுவ உதவியுடன் முக்தி பாஹினி பிரிவுகளின் நடவடிக்கைகள் டிசம்பர் 16, 1971 அன்று பாகிஸ்தான் துருப்புக்களை முழுமையாக சரணடைய வழிவகுத்தது. ஜனவரி 10, 1972 அன்று, முஜிபுர் ரஹ்மான் பங்களாதேஷ் திரும்பினார். நவம்பர் 4, 1972 அன்று, அரசியலமைப்பு சபை அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது,
இது டிசம்பர் 16, 1972 அன்று நடைமுறைக்கு வந்தது. முஜிபுர் ரஹ்மான் நாட்டின் அரசாங்கத்திற்கு தலைமை தாங்கினார். இதுவே வங்கம் தந்த பாடமாக நாம் அறிகிறோம்.
ஆனால் வரலாற்று ரீதியில் வங்கம் தராத பாடமாக பல விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. சக்மாக்களுக்கு எதிரான அடக்குமுறை் கடந்ந ஏழு தசாப்தங்களாக தொடர்கிறது.
பழங்குடியின சக்மா மக்கள் பங்களாதேச பாதுகாப்புப் படைகளாலும், அரசியல் சக்திகள் மற்றும் நில அபகரிப்பாளர்களிடமிருந்து இன்னமும் அடக்குமுறையை எதிர்கொள்கின்றனர்.