Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழகத்தில் ஒரேநாளில் ஆறாயிரம் பேருக்கு தொற்று கண்டறிவு!

தமிழகத்தில் ஒரேநாளில் ஆறாயிரம் பேருக்கு தொற்று கண்டறிவு!

1 minutes read

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஐயாயிரத்து 990 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்து 39ஆயிரத்து 959ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று (புதன்கிழமை) 98பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் ஏழாயிரத்து 516ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் மட்டும் ஒரேநாளில் ஆயிரத்து 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழகம் முழுவதும் ஐயாயிரத்து 891 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று இலட்சத்து 80ஆயிரத்து 63ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இன்று அதிகபட்சமாக 73 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தமிழகத்தில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 47 இலட்சத்து 99 ஆயிரத்து 905ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More