இந்தியா – சீனா இராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற மூன்றாவது நாள் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இருநாட்டின் எல்லைப்பகுதியிலும் மிக அருகில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கு லடாக் எல்லையில் ஃபிங்கர் 4 மலைத்தொடரின் சிலபகுதிகளை சீன ஆக்கிரமித்திருந்தது. குறித்த பகுதிகளை இந்திய இராணுவம் இரவோடு இரவாக மீட்டுள்ளதுடன், அந்த பகுதியில் தனது படை பலத்தையும் அதிகரித்துள்ளது.
அமைதிப் பேச்சுகளின் போது படைகளை முழுவதும் விலக்கிக் கொள்வதாக ஒப்புக் கொண்ட சீனா ஃபிங்கர் 4 முதல் 8 வரையிலான மலைத் தொடரை தனது கட்டுப்பாட்டில் வைத்து படைகளை விலக்கிக் கொள்ள மறுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில் எல்லைப்பகுதியில் விழிப்புடன் இருக்குமாறு இந்திய உள்துறை அமைச்சகம் படையினரை அறிவுறுத்தியுள்ளது. சீனா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளிடம் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.0Shares