தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஐயாயிரத்து 783 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்து 63ஆயிரத்து 480ஆகப் பதிவாகியுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 88 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் ஏழாயிரத்து 836ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் ஒரேநாளில் 955 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்தமாக ஒரு இலட்சத்து 41ஆயிரத்து 955பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழகம் முழுவதும் ஐயாயிரத்து 820 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்தைக் கடந்துள்ளது.
இதன்படி, நான்று இலட்சத்து நான்காயிரத்து 186 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில் மேலும் 51 ஆயிரத்து 458 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இன்று அதிகபட்சமாக 84 ஆயிரத்து 34 பேருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தமிழகத்தில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 51 இலட்சத்து 26 ஆயிரத்து 231ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.