சீனாவுடனான எல்லைப் பிரச்சினை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்கிழமை) விளக்கம் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் சீனா உடனான மோதல் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து விவாதிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
இதைதொடர்ந்து எல்லையில் தற்போதைய நிலை குறித்து ராஜ்நாத் சிங் இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் விரிவான அறிக்கையை வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா-சீனா இடையே மோதல் போக்கு கடந்த மூன்று மாதங்களாக நிலவி வருகிறது. இது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் 5 அம்ச கோரிக்கைகளை கொண்ட உடன்படிக்கை எட்டப்பட்டது.
இதன் காரணமாக எல்லையில் கடந்த ஒரு வாரமாக சீன இராணுவம் எந்தவித அத்துமீறல்களிலும் ஈடுபடாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது