தமிழகத்தில் புதிதாக 5,697 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 208 ஆக உயர்ந்துள்ளது.
அதில் சென்னையில் மட்டும் இன்று 989 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 68 பேர் இன்று உயிரிழந்துள்ளதாகவும் இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,502 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதேவேளை ஒரேநாளில் 5,735 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் இதுவரை மொத்தம் 4 இலட்சத்து 58 ஆயிரத்து 900 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் தற்போது 46 ஆயிரத்து 806 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.