1
கரைச்சி பிரதேச சபையினது 23.02.2018 அன்று நடைபெற்ற 2வது சபை அமர்வில் கரைச்சி பிரதேச சபையின் பொது நூலகம் பற்றி நடைபெற்ற விவாதத்தில் இராணுவம் கைப்பற்றி வைத்திருக்கும் 3.5 ஏக்கர் நிலப்பரப்பினை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவதென ஏகமதாக தீர்மாணிக்கப்பட்டது
இந்த தீர்மாணத்திற்கு அமைவாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரினால் 14.05.2018 ம் திகதி 571 படைப்பிரிவின் கட்டளை அதிகரிக்கும் அப்போது இருந்த வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் சனாதிபதி பிரதமர் ரணில்விக்கிரமசிங்க மற்றும மைத்திரிபாலசிறீசேன அவர்களுக்கும் குறித்த நூலக காணி விடுவிப்பு தொடர்பாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை சாதகமான பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இந்த 3.5 ஏக்கர் விஸ்திரணம் உள்ள கரைச்சி பிரதேச சபை வளாகத்திள் 1975ம் ஆண்டு பாரளுமன்ற உறுப்பினராகவும் தபால் தொலைத்தொடர்பு அமைச்சராகவும் இருந்த செல்லையை குமாரசூரியர் அவர்களினால் எண்கோண வடிவிலான பொது நூலமுகம் விளையாட்டு அரங்கத்துடன் கூடிய மைதானமும் நவீன சந்தை கட்டத்தொகுதியும் வடிவமைக்கப்பட்டு அப்போது பிரதம மந்திரியாக இருந்த சிறீமாவே பண்டாரநாயக் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது
2009ம் ஆண்டு மீளக்குடியமர்வுக்குப்பின்னர் கரைச்சிபிரதேச சபைக்குரிய பொதுநூலக வளாகம் இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ளபடியினால் இந்த காணியினை விடுவித்து கிளிநொச்சிக்கான பொது நூலகத்தினை நிர்மாணித்து மக்களின் பயன்பாட்டிற்கு கையளிப்பதற்கு எதுவாக கரைச்சி பிரதேச சபை பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கரைச்சி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நூலகத்திற்குரிய காணி விடுவிக்கப்படாமல் இருப்பதனால் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
நாட்டில் தற்போது புதிய அரசாங்கம் பதிவி ஏற்றுள்ள நிலையில் கிளிநொச்சி மக்களின் மிக முக்கிய தேவையான பொது நூலகத்தினை நிர்மாணிப்பதற்காக நாட்டின் மேன்மை தங்கிய சனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களுக்கும் இக்காணியை விடுவிப்பதற்குரிய மேலான நடவடிக்கையை மேற்கொண்டு உதவுமாறு கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் அவர்கள் உத்தியோக பூர்வமான கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.