Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ‘கேணல் கிட்டு நினைவான தமிழர் விளையாட்டு விழா – மெல்பேர்ன் – 2022’ இடைநிறுத்தம்

‘கேணல் கிட்டு நினைவான தமிழர் விளையாட்டு விழா – மெல்பேர்ன் – 2022’ இடைநிறுத்தம்

1 minutes read

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் எதிர்வரும் ஒன்பதாம் நாள் (09/01/2022) நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்த கேணல் கிட்டு அவர்களதும் அவருடன் வீரச்சாவடைந்த மாவீரர்களினதும் நினைவான “தமிழர் விளையாட்டு விழா – 2022“ தவிர்க்கமுடியாக் காரணத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவிவரும் கொரோனா தொற்றும், நோய்த்தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளும் இந்த இடைநிறுத்தத்துக்குக் காரணங்கள் என்பதை வருத்தத்துடன் அறியத் தருகின்றோம். விக்ரோறிய மாநிலத்திலும் மீண்டும் நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இவ்வேளையில், இவ்விளையாட்டு நிகழ்வு நடாத்துவது பொருத்தமற்றதென்ற காரணத்தால், சமூகப்பொறுப்புணர்வுடன் இந்நிகழ்வு இடைநிறுத்தப்படுகின்றது என்பதை அறியத்தருகின்றோம்.

-தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, விக்ரோறியா.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More