June 4, 2023 9:31 pm

யாழில் பாடசாலை மாணவியியுடன் அங்க சேஷ்டை | இராணுவ சிப்பாய் மக்களால் நையப்புடைப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

யாழ்  வசாவிளான் பகுதியில் வீதியால் சென்ற பாடசாலை மாணவியிடம் அங்க சேஷ்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயை அப்பகுதி மக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

திங்கட்கிழமை (22) மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றநிலையில் இது தொடர்பில் பலாலிப் பொலிஸார் மற்றும் இராணுவப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தனிமையில் சென்ற பாடசாலை மாணவியை பின்தொடர்ந்த குறித்த இராணுவ சிப்பாய் அங்கசேஷ்டையில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் மாணவி குரலெழுப்பிய நிலையில் அங்கு கூடிய பொதுமக்கள் குறித்த இராணுவ சிப்பாயை நையப்புடைத்து பொலிஸில் ஒப்படைத்தனர்.

தமிழ் இராணுவ சிப்பாயான குறித்த நபர் கடந்த காலத்திலும் இவ்வாறான சில்மிஷங்களில் சிக்கியிருந்தாரென கூறப்படுகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்