கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி. உடல் நலம் பெற்று வர வேண்டும் என்று பிரபலங்கள், ரசிகர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டி இன்று மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்தபடியே நடிகர், நடிகைள் பங்கேற்கும் மவுன கூட்டு பிரார்த்தனை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டி இன்று மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்தபடியே நடிகர், நடிகைள் பங்கேற்கும் மவுன கூட்டு பிரார்த்தனை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் அவரவர் வீட்டில் இருந்த படியே எஸ்.பி.பி பாடிய பாடல்களை ஒலிக்கவிட்டு பிரார்த்தனை செய்தார்கள்.
இயக்குனர் பாரதிராஜா தலைமையில், பிரபு, நடிகை சரோஜாதேவி, இயக்குனர்கள் அமீர், வெற்றிமாறன், தங்கர் பச்சன், பார்த்திபன், சேரன், கே.எஸ்.ரவிக்குமார், லிங்கு சாமி ஆகியோர் வீடியோ மூலம் கலந்துக் கொண்டு பிரார்த்தனை செய்தார்கள்.
அதுபோல், ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், உள்பட திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.