சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த நடிகர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்த்கேயன் நடிப்பில் 2012-ஆம் வெளியான திரைப்படம் மெரினா. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் பல்வேறு சிறுவர்கள், கடற்கரை ஓர வேலைகள் பார்ப்பவர்களாக நடித்திருந்தனர். இதில் ஒருவராக மைலாப்பூரைச் சேர்ந்த தென்னரசு என்பவர் நடித்திருந்தார்.
இவர் தற்போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விஷயம் தெரிய வந்துள்ளது. மைலாப்பூர் நொச்சி நகர் பகுதியில் வசித்து வந்த இவர், குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தென்னரசுவின் இந்த திடீர் மரணம், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.