Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் அமீர் படத்தின் முக்கிய அறிவிப்பு

அமீர் படத்தின் முக்கிய அறிவிப்பு

1 minutes read

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் இருக்கும் அமீர் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அமீர் படத்தின் முக்கிய அறிவிப்புயோகி’, ‘வடசென்னை’ திரைப்படங்களுக்கு அடுத்ததாக இயக்குனர் அமீர் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘நாற்காலி’. ‘மூன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பாக ஆதம் பாவா இப்படத்தை தயாரித்துள்ளார். ‘முகவரி’, ‘காதல் சடு குடு’, ‘தொட்டி ஜெயா’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வி.இசட்.துரை இந்த ‘நாற்காலி’யை இயக்கியுள்ளார்.

இதில் அமீருடன், ‘555’ திரைப்படத்தின் நாயகி சாந்தினி ஸ்ரீதரன் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி, அர்ஜூனன், கோவை பாபு, ஜார்ஜ் விஜய், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், சலீமா உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் கடைசியாக இந்த திரைப்படத்திற்காக “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு..” என்ற பாடலை பாடியிருக்கிறார்.

அமீர்

மிகுந்த பொருட் செலவில் நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மேலும், இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவேகத்துடன் நடந்து வருவதாகவும், ”நாற்காலி” யை வரும் மார்ச் மாதம் திரையரங்கில் வெளியிட இருப்பதாகவும் படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More