கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததாக ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் அறிவித்த போலிவூட் நடிகர் அக்ஷய் குமார், தற்சமயம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் அக்ஷய் குமார் மும்பையின் ஹிரானந்தனி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்ஷய் குமார் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைத்திய ஆலோசனையின் கீழ் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலையின் தாக்கத்தின் பின்னர் பல போலிவூட் நடிகர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
ஆலியா பட் முதல் ரன்பீர் கபூர் வரையான பிரபலங்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்னர்.