சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த விவேக்கிற்கு, சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படக்குழுவினர் மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தி உள்ளனர்.நகைச்சுவை நடிகர் விவேக், கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிக அளவில் மரங்களை நட்டு இயற்கையை பாதுகாக்க விரும்பியவர் விவேக். அதனால் அவர்மீது அபிமானம் கொண்ட பலரும் தங்கள் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படக்குழுவினர் விவேக் நினைவாக மரக்கன்றுகளை நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளனர்.