Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘ராக்கெட்ரி’ படத்தை பார்க்க மக்கள் திரையரங்குகளுக்கு செல்கிறார்கள் | மாதவன் நெகிழ்ச்சி

‘ராக்கெட்ரி’ படத்தை பார்க்க மக்கள் திரையரங்குகளுக்கு செல்கிறார்கள் | மாதவன் நெகிழ்ச்சி

1 minutes read
  • நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். சில தினங்களுக்கு முன்பு ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ ஓடிடி-யில் வெளியானது. இருந்தாலும் திரையரங்குகளில் இத்திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

நம்பி நாராயணன் குடும்பத்துடன்

இந்நிலையில் மாதவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஓடிடி-யில் ராக்கெட்ரியை பார்த்துவிட்டு தியேட்டர்களுக்கு செல்லும் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விஞ்ஞானி நம்பி நாராயணனின் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More