மிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
பின்னர் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். திருமணமான பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தா, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.
இந்நிலையில், இவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தபடி நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரின் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன.
நடிகை சமந்தா, அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து நடிக்க உள்ளார். அதேபோல் கேம் ஓவர் படத்தை இயக்கி பிரபலமான அஸ்வின் சரவணன் இயக்கும் புதிய படத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணாக நடிக்க உள்ளார்.