தேவையான பொருட்கள்
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – 11 டேபிள் ஸ்பூன்
பாதாம் பிசின் – 1 டேபிள் ஸ்பூன்
பிரஷ் கிரீம் – 500 மில்லி
நன்னாரி சர்பத் – 1 1/2 டீ ஸ்பூன்
இனிப்பு கோவா – 100 கிராம்.
செய்முறை
பாதாம் பிசினை ஐந்து மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அடி கனமான, அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, எட்டு ஸ்பூன் சர்க்கரையைப் போட்டு, நீர் சேர்க்காமல் கிளறவும்; சில நிமிடங்களில் பொன்னிறமாக மாறும். அப்போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, சிறிது தண்ணீர் சேர்த்துக் கிளறி, தனியாக எடுத்து வைக்கவும்.
அகலமான, அடி கனமான வாணலியில், கொழுப்பு நீக்காத பால் சேர்த்து, 600 மில்லியாக குறையும் வரை காய்ச்சவும். மேலே கட்டும் ஏட்டை கரண்டியால் எடுத்து பாலில் போடவும். பால் குறைந்ததும், சர்க்கரை பாகை பாதி அளவு சேர்க்கவும்.
இரண்டு ஸ்பூன் சர்க்கரை போட்டு கலந்து, கோவா சேர்த்து கலந்து கொள்ளவும்; அடுப்பை அணைக்கவும். மீதி உள்ள சர்க்கரை பாகை, நீரில் ஊறிய பாதாம் பிசினில் போட்டு தனியாக கலந்து வைக்கவும்.
பிரஷ் சமையல் கிரீமை மிக்சியில் அடித்து, பால் கலவையுடன் சேர்த்து, இரண்டு ஸ்பூன் பாதாம் பிசினையும் போட்டு, நன்கு கலந்து வைக்கவும். இதில், கால் பங்கு கலவையை தனியே எடுத்து ஐஸ் கிரீம் கிண்ணத்தில் வைத்து, இறுக்கமாக மூடி, ஐந்து மணி நேரம் பிரீசரில் வைக்கவும். மீதி பாலில் நன்னாரி சர்பத் சேர்த்து, இரண்டு மணி நேரம், ‘பிரிஜ்’ஜில் வைக்கவும்.
பரிமாறுவதற்கு முன், டம்ளரில் பாதி அளவு குளிர்ந்த பால், அதன் மேல் ஒரு கரண்டி ஐஸ் கிரீம், அதன் மேல் சிறிது பால், அதன் மேல் சர்க்கரை பாகு சேர்த்தால், அருமையான மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா தயார்.
0