ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நான் ஸ்ரீலங்கன் இல்லை என்ற கவிதை நூலுக்கான அறிமுகக்கூட்டம் இன்று மாலையில் சென்னையில் இடம்பெறுகின்றது.
கவிஞர் வெயில் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், ஊடகவியலாளர் செந்தில் கரிகாலன், கவிஞர்பச்சோந்தி, சந்துரு மாயவன், கவிஞர் மனுஷி ஆயோர் கவிதை நூல் குறித்து உரையாற்றுகின்றனர்.
சென்னை வேளச்சேரியில் அமைந்திருக்கும் யாவரும் பதிப்பகத்தின் பி பார் புக்ஸ் புத்தகக் கடையில் நடைபெறும் இந்த கவிதை நூல் அறிமுகக் கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.