Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் வரலாற்றின் மகள் | தீபச்செல்வன் கவிதை

வரலாற்றின் மகள் | தீபச்செல்வன் கவிதை

1 minutes read


தந்தையே வரலாறு முழுவதும்
இப்படித்தான் இருந்ததா?
நாங்கள் எப்போதும்
அடிமையாகவே இருந்தோமா?

என் சிறு குழந்தையே
நீ ஆக்கிரமிப்பாளர்களையும் அறிவாய்
பாதுகாவலர்களையும் அறிவாய்

நம்முடைய மூதாதையர்
தம்மைத் தாமே ஆண்டனர்
எம் நிலத்தின் அரசுகளை
அந்நியர்கள் விழுங்கிக் கொண்டனர்

தந்தையே! போர்த்துக்கீசர்கள் போய்விட்டனர்
ஒல்லாந்தர்கள் வெளியேறிவிட்டனர்
பிரித்தானியர்களும் புறப்பட்டு விட்டனர்
ஆனாலும் இன்னும் ஏன்
ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறோம்?

அவர்கள் வெளியேற
இவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டனர்
அவர்கள் திருப்பித் தந்ததை
பின்னர் இவர்கள் பறித்துக்கொண்டனர்

இவர்களின் விடுதலைக்காகவும்
நாம் போராடினோம்
ஆனால் இவர்களோ
எமது சுதந்திரத்தைப் பறித்துக்கொண்டனர்.

இவர்கள் ஆக்கிரமிப்பை
ஐக்கியம் என்றனர்
விடுதலையை பிரிவினை என்றனர்

மகளே!
நம் தேசங்களை கலைத்து
ஒன்றுபட்ட நாட்டின்
சுதந்திரத்திற்காக உழைத்த உன்மூதாதையரை  
இவர்கள் தம் தோளில் ஏந்திக் கொண்டாடுகையில்
அவர் நினைத்திரார்
உன்னைப்போலொரு குழந்தை
மறைக்கப்பட்ட நம் வரலாறு
குறித்து கேட்குமென.
0

தீபச்செல்வன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More