0
குருந்த மலை ஆதி சிவனும்
காணமல் போனார்
தேடிப்போனவர்
நமச்சிவாய
சிவநாமம் உச்சரிக்கவும்
தடையென்றானது…
வாழும் வழிபாட்டு மரபுரிமையை
நாளும் தின்னும் காட்டாட்சி
சாது சாது என்றபடி
சகல இடமும் விரிவாகும்
சிவன் பெயரால்
சீவியம் நடத்தும்
சீவன்களும் சாமரம் வீச
இன்று
தையிட்டியில்
இராணுவ புத்தரின்
அதிகாரஅத்திவார
தோண்டுதல் நடக்கும்
கண்மூடியிருந்தால்
சிவபூமியாவும் காணாமல் போகும்
சிவனே ! கண் திறவாய்!!
சிவனடியர்களே ! விழித்தெழுவீர் !!
- நகுலேசன்