Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் ஒரு கோப்பைத் தேநீராய் ஒரு இனத்தின் குருதி | சி்.கிரிஷாந்த்ராஜ்

ஒரு கோப்பைத் தேநீராய் ஒரு இனத்தின் குருதி | சி்.கிரிஷாந்த்ராஜ்

1 minutes read

ஒரு கோப்பைத் தேநீராய்
ஒரு இனத்தின் குருதி
ருசித்துப் பருகப்படுகிறது!

தேயிலைச் செடியின்
கழுத்து நெரிக்கப்பட்டு
தலை திருகப்பட்டு
கொழுந்து கொல்லப்படுகிறது!

பாவம் ஏழைக் கொழுந்து,
முதலாளித்துவக் கூடைக்குள்
எறியப்பட்டு நசுக்கப்பட்டு
மூச்சு முட்டி செத்துப்போகிறது!

கொழுந்துப் பிணம்
மடுவத்தில் தரம்
பிரிக்கப்பட்டு
தொழிற்சாலைப்
பிணவறைக்குக்
கொண்டு செல்லப்படுகிறது!

கொழுந்துப் பிணத்தை
அரைத்துத் தூளாக்க
தொழிற்சங்க இயந்திரம்
இரவு பகலாய் உழைக்கிறது!

கொழுந்துப் பிணம்…
ஒவ்வொரு பெயர்களில்
ஒவ்வொரு தரத்தில்
தூளாகப் பொதியாகிறது!

கொழுந்துப் பிணம்…
விலை மதிப்புமிக்க
கண்ணாடிக் குவளையில்
சுடுநீரில் கலக்கப்படுகிறது!

இப்போது…
தொழிற்சங்கமெனும்
இயந்திரமும்
முதலாளித்துவக்
கூடையும்
ஒரு கோப்பைத் தேநீரை
சுவைக்கப்போகின்றன!

குளு குளு அறை…
ஆவி பறக்க
ஒரு கோப்பை
சுடு தேநீர்…
ஆகா!!!

ஆத்மா சாந்தியடையாத,
கொழுந்தெனும்
தொழிலாளியின் ஆவி,
தேநீர் கோப்பையிலிருந்து
பறந்து உலாவுகிறது!

சி்.கிரிஷாந்த்ராஜ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More