நீதி தேவதை
நிர்வாணமாய் நிற்கிறாள்!
ஆடை களைந்தது
அரசாங்கம்தான்!
கைகளில் தராசை
ஏந்திக்கொள்வதா?
மார்பையும் பிறப்புறுப்பையும்
மறைத்துக்கொள்வதா?
நடுத்தெருவில்
சாமானியனை
ஏறி மிதிக்கும் சட்டம்,
ஆளுங்கட்சியின்
மடியில் சூப்பி
குடித்துப் படுத்திருக்கிறது!
பயங்கரவாதத்
தடைச்சட்டம்,
வியர்வையை
நக்கித் துடைத்து
காற்று விசிறுகிறது!
ஊழல் வழக்கு
விடுவித்து விடுதலை
செய்துவிட்டு,
காமக் களைப்பில்
சோர்ந்து கிடக்கிறது!
பருப்பிலும்
எண்ணெயிலும்
புற்றுநோய்!
செத்துத் தொலைகிறோம்!
சிகரெட் பிடித்து
விளம்பரம் செய்யும்
அடிமுட்டாள்களால்
வேறெதைத்
தந்துவிட இயலும்?
சி்.கிரிஷாந்த்ராஜ்