1994 ஆம் ஆண்டு மருத்துவ விரிவுரைகள் நடைபெறாத நாட்களில் தமிழீழ மருத்துவ கல்லூரியின் கட்டட வேலை ஒன்றுக்காக வடமராட்சியின் மணல்காடு சென்று
மணல் ஏற்றிவரும் வேலையினை செய்து கொண்டிருந்தோம்.
பென்னம் பெரிய மணல் திட்டிகள் அதிகம் கொண்ட அந்த குக்கிராமத்தில் ஒரு #மூதாளர்_தோட்டம் செய்து கொண்டிருந்தார்.
அந்த ஐயாவிடம் சென்று கதைத்த போது அந்த மணல் மண்ணில் பயிர்கள் நல்ல பலன் தரவில்லை என அவர் கவலைப்பட்டுக் கதைத்தார்.
நாங்கள் எல்லோரும் கவலைப்பட்டுவிட்டு அங்கிருந்து வந்துவிட்டோம்.
உண்மையில் தனியே எங்கள் கவலைகள் அவரின் வாழ்வினை வளமாக்க முடியாது என்பதை அருள் அண்ணை புரிந்து கொண்டார்.
அடுத்த நாள் மணல் அள்ளச் சென்ற எங்கள் பாரவூர்தியின் சாரதியிடம் கோப்பாய் துயிலும் இல்லம் அமைந்திருந்த ராஜவீதியின் அருகே அமைந்துள்ள #செம்மண்பிட்டிக்கு செல்லுமாறு அருமை நண்பர் அருள் சொன்னார்.
உங்கள் பொறுப்பாளர் சொல்லாமல் அங்கு செல்ல முடியாதெனச் சொன்ன பாரவூர்தியின் சாரதிக்கு எங்கள் வீட்டில் அப்பா,அம்மா
கைச்செலவுக்காக
தந்த பொக்கற் மணியில் கொஞ்சம் செலவழிக்க வேண்டியிருந்தது.
பாரவூர்தி நிறைய அங்கிருந்து வளமான செம்மண்ணை ஏற்றிக் கொண்டு அந்த மூதாளரின் மணல் காணியில் கொட்டினோம்.
வெள்ளை வெளேரென்று
வெண் மணல் கொட்டிக் கிடந்த அந்த கிராமத்து மூதாளரின் வளவில் #செம்மண் கொண்டு செங்கம்பளம் விரித்து மகிழ்ந்தோம்!
இந்த நடவடிக்கைக்கையினை செயல்வடிவம் கொடுத்து நண்பர் அருளுக்கு தோள் கொடுத்து உற்சாகம் ஊட்டியவர்களில் மேஜர் கஜேந்திரனையும் கப்டன் இதயகீதனையும் அடுத்த ஆண்டில் வலிகாமம் பகுதியில் இழந்துவிட்டோம்.
வறுமையிலும் முதுமையிலும் வாடிய அந்த #மூதாளர்கையெடுத்துக்கும்பிட்டு எங்கள் நண்பர்களை வாழ்த்தினார்.
ஆழிப்பேரலை மீட்பனாய் நீ கிரிவலம் வந்த எங்கள் அம்பாறை மாவட்டம் முதல் யாழ்ப்பாணம் வரை உனை வாழ்த்திய வாய்கள் #ஓலமிட எங்கு சென்றாய்
தோழா…! 🙏
எழுதி பகிர்ந்தவர் : போராளி மருத்துவர் தணிகை
Tharshan Tharum