அவுஸ்திரேலியா மெல்பனில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட தென்னாசிய சங்கத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளரும் சமூகப்பணியாளருமான நடேசனின் நான்கு நூல்களின் வெளியீட்டு அரங்கு, எதிர்வரும் மேமாதம் 02 ஆம்திகதி ( 02-05 – 2021 ஞாயிற்று க்கிழமை மாலை3.00மணிக்கு கிளன்வேவெலி RSL மண்டபத்தில் (RSL GlenWaverley) 161 Coleman Parade, Glen Waverley VIC 3150நடைபெறும்.
ஏற்கனவே வெளிவந்தநடேசனின் அசோகனின்வைத்தியசாலை (நாவல்) நூலின் ஆங்கில மொழிபெயர்பு KingAsoka Veterinary Hospital, புதிய சிறுகதைத் தொகுதி அந்தரங்கங்கள், சிறுகதைகளின் ஆங்கிலமொழிபெயர்ப்பு Veterinary Vignettes, சிறுகதைகளின் சிங்களமொழிபெயர்ப்பு உமத்துவுவாத் ஒஹுபிரிமியெக்கி( கிறுக்கனாயினும் அவனும் ஆண்மகன் தான்) ஆகிய நூல்களே வெளியிடப்படவுள்ளன.
பேராசிரியர் கௌசல் சிறிவஸ்ரா தலைமையில் இடம்பெறவுள்ள இந்நான்கு நூல்களின் வெளியீட்டு அரங்கை கலைஞரும் எழுத்தாளருமான மாவை நித்தியானந்தன் நெறிப்படுத்துவார்.
சிங்கள – ஆங்கிலஎழுத்தாளர் கலாநிதி ஷண்ண விக்கிரமசேகர, கலாநிதி சமன்கரசின் ஆராச்சிகே, வானொலி ஊடகவியலாளர் திருமதி டில்ருக்ஷி விஜேசூரிய , இலக்கிய ஆர்வலர் திரு. அசோக்குமார் ஆகியோர் நூல்களை அறிமுகப்படுத்தி உரையாற்றுவர்.
நடேசன் ஏற்புரைவழங்குவார்.