குருந்தூர்மலை கட்டிடம்
ஈரம் காயமுன்னர்
வெடுக்குநாறியில் வெறியாட்டம்
மதங்களை உடைக்காதீர்
மனங்களை சிதைக்காதீர்
இனங்களை பிரிக்காதீர்
இழிசெயல் செய்யாதீர்
குண்டகம் செய்ய நினைத்தால்
இரண்டகமாக பதில் கிடைக்கும்
காடுகளில் இருக்கும் மிருகங்கள்
காலத்துக்கு ஏற்றால் போல் மாற்றம்
கலியுகத்தில் இருக்கும் மனிதனுக்கு
காடைத்தனமான காய்ச்சல்
குண்டு தாக்குதலால்
குருதியில் நனைந்தோம்
குண்டர்கள் தாக்குதலால்
கும்பாபிஷேக செய்கின்றோம்
கிறுக்குத்தனமான கிருமிகளுக்கும்
கிரந்தம் அடித்தோம்
திமிரு கொண்ட விஷசங்களுக்கும்
திருப்பி விவரம் சொல்வோம்
வெடுக்குநாறி வீரஞ்செறிந்த பூமி
வெறித்தனமும் வேண்டாம்
வேற்றுமையும் வேண்டாம்.
சுஜந்தன்