October 4, 2023 4:57 am

 பரிதவிப்பு | சீனு ராமசாமி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

இறுதியுத்த நாட்களில் தீப்பிடித்த
காயத்தோடு
கடலில் அலைந்த உயிர்களை அறிந்ததனால்

காட்டி கொடுத்தவர்களை காட்டமுடியாது

இறந்தவர்களின் நீதி
உப்பு நீரில் கரைந்து போனபடியாலும்

உயரத்தில்
துக்கத்தின் தலையை
ஆட்டி மௌனக் கடலுக்குள்
கையறு நிலையின்
ஆழத்தில் கால் புதைத்து அழுத கண்ணீர் கதைகள் புதையுண்டு போனாலும்,

முக்கடல் சந்திப்பின் திசைப்பார்த்து
சொற்களற்று,
ஓசையின்றி
தூரத்தில் இன்னமும் எதையோ ஒளியால் தேடிக்கொண்டிருக்கிறது
அந்த கலங்கரை விளக்கு..

சீனு ராமசாமி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்