Thursday, April 18, 2024

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் காந்தள் மலர்கள் – தீபச்செல்வன்

காந்தள் மலர்கள் – தீபச்செல்வன்

0 minutes read

 

வானம் பார்த்திருந்து
மழையை தாகத்தோடு அருந்தி
கிழங்குகள் வேரோடி
நிலத்தை கிழித்துக் கொண்டு படர்ந்தெழுகிறது
காந்தள்க் கொடி.
எதற்காக இந்தப் பூக்கள்
வருடம் தோறும்
கார்த்திகை மாதத்தில் விழிக்கின்றன?
ஒரு சொட்டு கண்ணீர் விடவும்
ஒரு விளக்கு ஏற்றவும்
மறுக்கப்படுகையில்
எதுவும் இல்லையென
எல்லாமும் அழிக்கப்பட்டாகிற்றென்கையில்
அனல் கனக்கும் தாயின் கருப்பையை
ஈரமாகிக்கின்றன காந்தள் மலர்கள்
தாயின் கனவு வண்ணமாய்
தாகத்தோடு பூக்கும் காந்தள் மலர்களை
யாரால் தடுக்க இயலும்?

-தீபச்செல்வன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More