மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் 45 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.
நா. முத்துகுமார் இன்று இல்லை என்றாலும் அவர் தந்துவிட்டு சென்ற பாடல்கள் நீங்கா நினைவலைகளால் இடம்பிடித்துள்ளன.
சுமார் 1500 திரைப்பாடல்களையும், நூல்களையும் எழுதியுள்ள இவர் 1975 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்தார்.
1999 ஆம் ஆண்டு வெளியான மின்சார கண்ணா திரைப்படத்தில் இடம்பெற்ற “உன்பேர் சொல்ல ஆசைதான்” என்ற பாடல் மூலம் தனது சினிமா வாழ்கையை ஆரம்பித்தார்.
தமிழ் சினிமாவிற்கு காலத்தால் அழியாத பாடல்களை வழங்கியுள்ள இவர் 2016 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.