கவிதை அனுபவம் என்ற நூலை, ஈழத்து கவிஞர் வ.ச. ஜெயபாலனும் தமிழக் கவிஞர் இந்திரனுன் இணைந்து உருவாக்கியுள்ளனர். இருவரதும் கவிதை அனுபவம் பற்றிய உரையாடலை புத்தகமாக தொகுத்திருக்கிறார் சுந்தர புத்தன்.
இது பற்றி கவிஞர் இந்திரன் முகநூலில் கூறியுள்ளதாவது,
“ஈழத்துக் கவிஞர் ஒருவரும் தமிழகத்துக் கவிஞர் ஒருவரும் என்றைக்காவது நிம்மதியாக அமர்ந்து இலக்கியம் பற்றி பேசியிருக்கிறார்களா? அது அப்படியே பதிவாகி புத்தகமாக வந்திருக்கிறதா? இதோ வந்திருக்கிறது.
இந்தியக் கவிஞர் இந்திரன் இலங்கைக் கவிஞர் வ.ஐ. ச. ஜெயபாலன் ஆகியோர் இரண்டு நாள் உரையாடியதை பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் அப்படியே பதிவு செய்து புத்தகமாக்கியிருக்கிறார். இன்னும் சில நாள்களில் படைப்பு வெளியீடாக உங்கள் கரங்களில் தவழப் போகிறது..” என்று தெரிவித்தார் அவர்.