தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு கருணா மாரடைப்பால் காலமானார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) கடந்த நாற்பத்தி ஐந்து ஆண்டுகளாக நடந்து வரும் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்களுக்கான அமைப்பாகும்.
கருத்துரிமைக்காகநடைபெறுகின்ற அரசியல், பண்பாட்டு நிகழ்வுகளை உற்று நோக்கி, மக்களைப் பாதிக்கும் ஒவ்வொரு அசைவுக்கும் எதிர்வினை ஆற்றி, தேவைப்படும் போதெல்லாம் எழுத்தாளர்களை, கலைஞர்களையும் அணி திரட்டி போராடித் தன் பயணத்தை முன்னெடுப்பதாக தமுஎகச தெரிவிக்கிறது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில், இளைஞர்களின் கலை திறனை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.