Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் சம்மாந்துறையில் கலை இலக்கியப் போட்டி வெற்றிகளுக்கு பரிசளிப்பு!

சம்மாந்துறையில் கலை இலக்கியப் போட்டி வெற்றிகளுக்கு பரிசளிப்பு!

1 minutes read

சம்மாந்துறையில் கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பும் “இலக்கியம்” நினைவு மலர் வெளியீடும்.

நிரூபர் நூருல் ஹுதா உமர் & ஐ.எல்.எம். நாஸீம்

சம்மாந்துறைப் பிரதேச செயலகமும் கலாசார அதிகார சபையும்  இணைந்து நடாத்திய கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும்  நிகழ்வும் “இலக்கியம்” எனும் நினைவு மலர் வெளியீடும் கடந்த புதன்கிழமை (30) சம்மாந்துறை காலாசார மண்டபத்தில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்  எம்.எம் ஆசிக், அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தகர் ரி.எம் றிம்சான், சம்மாந்துறை  கலாசார அதிகார சபை உப தலைவர் இலக்கியவாதி வைத்தியர் எம்.எம் நெளசாத், சம்மாந்துறை கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தகர் எம்.வை நெளஸானா  என பலரும் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கலை,கலாச்சார மற்றும் இலக்கிய துறைகளில் நடாத்தப்பட் போட்டியிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை  பெற்ற மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கும் பரிசில்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More