0
அண்மையில் அமரரான செல்வன் வாமனன் இராஜேஸ்கண்ணனின் 31ம் நாள் நினைவேந்தல் வல்லை, விக்னேஸ்வரா மண்டபத்தில் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வாமனன் பயின்ற பாடசாலை வகுப்பறை மேம்பாட்டுக்கான உதவி வழங்கப்பட்டதுடன் சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளரும் எழுத்தாளருமான வாமனனின் தந்தையார் இரா. இராஜேஸ்கண்ணன் எழுதிய ‘வாமனம்-பெருவெளி ஒன்றைத்தேடி அலையும் நினைவுகள் எனும்நினைவேடும் வெளியிடப்பட்டது.