மழைகாரணமாக ஒத்திவைக்கப்பட்ட, காங்கேசந்துறை மக்கள் கலைஞர் அமைப்பினரால் நடேஸ்வராக்கல்லூரி சந்தியருகில் அமைக்கப்பெற்ற, எங்கள் இசை நாடகமரபின் உன்னத ஆளுமையான நடிகமணி கலாநிதி வி.வி.வைரமுத்து உருருவச் சிலைத்திறப்பு விழா நாளை புதன் கிழமை மாலை 3 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
மக்கள் கலைஞர் அமைப்பின் தலைவர் கிருஷ்ணபிள்ளை மனோகரன் அவர்கள் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வின் முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணப்பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் கலைஞருமான பேராசிரியர் என் சண்முகலிங்கன் கலந்து கொள்கின்றார்.
இச் சிலைத்திறப்பு விழாவினையொட்டி நடிகமணி அவர்களின் அடிச்சுவட்டில் இசை நாடகத்துறையில் மிளிரும் கலைஞர்களுக்கான கௌரவிப்பும் ,இசை நாடக நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.