நீ மலைகளைக் கடக்க போகுறாய்
குன்றுகளைக் குடையப் போகிறாய்
ஆற்றைக் கடந்து உன் கனவுக் கோபுரத்தைக் கட்டிடப் போகிறாய்
இதயத்தைப் பிழிந்து வழியும் நினைவுகளைச் செதுக்கும் வழி சொல்வாய் தோழனே
எண்ணங்களைப் பெருக்கி ஏந்தும் அபலை நான்
ஏணி போல் உன் வாழ்வை உயர்த்திவிட
ஏந்திழை என்னால் இயலவில்லை
பாசத்தை குரலில் குழைத்துத் தரும் உன்னால் பரிவைத் தர முடியாது.
பரிவென்பது ஆற்றாமையைப் புரிதல்
என் ஆற்றாமையை புரியும் வண்ணங்கள் உனக்கில்லை
எங்கிருந்தோ எனை ஆளும் குரலே
என் இருப்பை இடம் மாற்றி விட்டாயே
எனதிருப்பை மீட்டு வர என் எண்ணங்களோடு போராடுகிறேன்
வெல்வது நீயல்லவா
செல்வி தமிழி