இந்துப் பெருவெளி எங்கும் வெள்ளிநிலா வாண்ணங்கொண்டெம் சுதந்திர வேட்கை பற்றிப் பாடிச் சபிக்கிறது அவர்களை
நட்சத்திர நாயகர்களின் செங்குருதி படிந்திட்ட நிலமெங்கும் பூக்கள் புரட்சிக் கீதங்களை இறைக்கிறது
ஒப்பற்ற திவலைகள் நெஞ்சுகள் நதியாய் நந்திக்கடலாகி ஆரவாரிக்கிறது
ஒரு விடுதலை தேசத்தில் அடையுண்ட கனவு கார்த்திகை தேசத்தில் கண்திறக்கிறது
நிலம் பிளந்தெழும் விதையாகி ஈழவர் உளம் பிழந்து எழும் எண்ணத் திராவகத்தில் மிதக்கிறது இலட்சியப் படகு
காலம் பயிர் சரிவது கதிரெறிந்து நிமிரவேயென இடைவெளிகள் புதுவெளியாக
மாவீரத்தின் மூச்சில்க் கலந்து தேசக்காற்றில் பறக்கிறது நினைவின் பறவை
இந்த மண்ணின் மாசற்ற மாந்தரை நினைத்து சுடரும் கார்த்திகைத்தீயில்
சத்திய எண்ணையை ஊற்றுவோம் இலட்சம் சிறகு வெட்டுண்டாலும் பறத்தலே கார்த்திகைக் கனவென
காலை 5.30
த.செல்வா
திருநகர்