மறக்குமோ மறக்குமோ மாவீரா
மண்ணில் கிடக்குதே உந்தன் மாவீரம்
ஆயிரம் ஆயிரம் உங்களின் வீரம்
அதனுள்ளே கிடக்குதே எங்கள் வீரா
நடந்த உன் பாதங்கள் தெரிகிறதே
நீ சுமந்த வலி அங்கு கிடக்கிறதே
எத்தனை துன்பங்கள் நீ சுமந்தாய்
எங்களுக்காகவே உயிர் எறிந்தாய்
கனவுகள் சுமந்து சென்றோரே
உங்கள் நினைவுகள் மறந்தோமோ
உயிரினை எறிந்து போனோரே
உறவுகள் உம்மை பிரியோமே
கவிதையாய் கடலில் நிமிந்தாரே
கண்களில் பூவாய் பூத்தாரே
எங்கள் கண்களின் தூரம் போகும் வரை
உங்களுக்காக நாம் பார்த்திருபோம்
காற்றோடு வந்து பேசுறீர்கள்
எங்கள் கனவோடு வந்து போகிறீர்கள்
நேற்றைய பொழுதினில் உன் நினைவை
பார்த்திட கண்கள் தேடுதடா
மறக்குமோ மறக்குமோ மாவீர
மண்ணில் கிடக்குதே உந்தன் மாவீரம்
நினைக்கிறோம் உந்தன் நினைவுகளை
ஒரு தரம் உங்கள் முகம் பார்க்க
மறக்குமோ மறக்குமோ மாவீர
மண்ணில் கிடக்குதே உந்தன் மாவீரம்
உங்கள் கல்லறை கதவினை திறந்து வை
மெல்ல உன் குரலினை கேட்கின்றோம்.
பா.உதயன்