நான் பேச நினைத்த நேரங்களில் நீ பேச வில்லை
என் துயரங்களை பகிர நீ இல்லை
என் கனவுகளை சொல்ல நீ இல்லை
என் எதிர்காலம் என்பதில் நீ இல்லை
என் கண்ணீரின் போது நீ இல்லை
என் உணர்வுகளை பகிர நீ இல்லை
நீ யார் நானே கேள்விக்கணைகளைத் தொடுத்து
கற்பனைக்கு உருக்கொடுத்தேன்
உருவமில்லா உன்னை எடுத்து
பதில்களையும் நானே தந்தேன்
எப்போதும் நீ யார் என்கையில்
ஒரு இடைவெளி நிரப்பப்படுகிறது என எண்ணினேன்
பாராங்கல்லாய் மௌனியாகும் உனக்கு உருவெதற்கு
என் பாஷைகள் புரியா உனக்கு எதை விளம்ப?
இந்த இருப்பு என்னகத்தில் இல்லை
எதிலும் இல்லை எனும் போது இந்த உறவெதற்கு
செல்வி தமிழி