Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் யுகபாரதியின் பிறந்த நாளில் அவரின் ‘தஞ்சை’ கவிதை

யுகபாரதியின் பிறந்த நாளில் அவரின் ‘தஞ்சை’ கவிதை

0 minutes read

தஞ்சை

வயலுக்குப் போனவர்கள்
வீடு திரும்பும்வரை
திக்திக்கென்று
அடித்துக்கொள்கிறது மனசு
எழவு விழுந்தாலும்
எடுத்துப் போட வழியில்லை
எல்லோரும் பசியாற
படி அளந்த நன்னிலம்
கிழிந்த பையோடு
வரிசையில் நிற்கிறது
இலவச அரிசிக்கு.

வீடு பெருக்குகிறவள்
நகருங்கள் என்பதற்குள்
எழுந்துகொள்ள
மனம்வராத நீதான்
கோஷம் போட்டுக்
கொடி தூக்குகிறாய்
பெண் விடுதலைக்கு.

சோகை பிடித்தாலும் பரவாயில்லை
குழந்தைகளைத் திட்டாதே
மண்ணள்ளித் தின்னட்டும்
சொரணை வர.

கருக்கரிவாள் எனது பேனா
கருத்துகள் சிவப்பைச் சிந்தும்
செருக்குகளை வீழ்த்தும் சுத்தி
சிந்தனையில் முளைக்கும் வெள்ளி
படிந்துவிட்ட ஆதிக்கத்தின்
பாசாங்கை வெட்டும் கத்தி
மூக்குச்சளி ஒழுகும் பிள்ளை
முகந்துடைக்க உதவும் துண்டு
சாக்காட்டை அள்ளி உண்ணும்
சாப்பாட்டு மேஜை; கவலை
வேக்காளம் தீரும் மட்டும்
வீசுகின்ற கலகக் காற்று
பலியாடாய்ப் போன தமிழின்
பண்பாட்டை மீட்கும் ஓசை….

யுகபாரதி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More