எம்மில் பெரும்பாலானவர்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் உயர் குருதி அழுத்தம் ஆகிய பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது.
இதனை கட்டுக்குள் வைக்க ஆயுள் முழுவதும் மருந்தினாலான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது.
இந்நிலையில் இதனைக் கட்டுப்படுத்த உணவு முறை ஒன்றை பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
உலகில் உள்ள மக்கள்தொகையில் நான்கு ஆண்களில் ஒருவருக்கும், ஐந்து பெண்களில் ஒருவருக்கும் இரத்த அழுத்த பாதிப்பு இருப்பதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு அதீத பணிச்சுமை, தவறான உணவு பழக்க வழக்கம் என பல்வேறு வகையிலான காரணங்கள் இருந்தாலும், அதனை முறையான மருத்துவ சிகிச்சையின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது தான் சிறந்த நிவாரணம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இந்நிலையில் High Flavonal Diet எனப்படும் ஃப்ளவோனல் சத்து செறிந்த உணவு முறையை பின்பற்றினால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
இத்தகைய ஃப்ளவோனல் சத்து தேநீர், அப்பிள், பெர்ரி போன்ற உணவுப் பொருட்களில் அதிகம் என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இத்தகைய உணவு முறையை பின்பற்றி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
( அனுஷா )
டொக்டர் தங்க பிரஜின்.