Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மட்டன் சூப்பை வைத்து ஆறு பேரை கொன்ற கேரளப் பெண் சிக்கினார்

மட்டன் சூப்பை வைத்து ஆறு பேரை கொன்ற கேரளப் பெண் சிக்கினார்

1 minutes read

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜூலி. இவருக்கு 16 ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியைச் சேர்ந்த ராய் தாமஸ் என்ற கோடீஸ்வரருக்கும் திருமணம் நடைபெற்றது.

சிறிது நாளில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. மேலும் ராய் தாமஸின் பெரியப்பாவின் மகன் சாஜூவுக்கும் ஜூலிக்கும் காதல் ஏற்பட்டது. ராய் தாமசின் குடும்பத்தினர் பெயரில் ஏராளமான சொத்துகள் இருந்ததால், அதை அபகரிக்க ஜூலி திட்டம் தீட்டினார்.

அதன்படி, கடந்த 2002ல் தனது மாமியாருக்கு மட்டன் சூப் வைத்து அதில் சயனைடு கலந்து கொடுத்து கொன்றார். அடுத்து 2008ல் மாமனாருக்கும், 2011ல் கணவர் ராய் தாமசுக்கும் சயனைடு கலந்த மட்டன் சூப் கொடுத்து கொன்றார்.

இதேபோல் 2014ல் உறவினர் மேத்யூ என்பவரையும்,  காதலர் சாஜுவின் மனைவி சிலி மற்றும் அவரது குழந்தைகளை 2016ல் இதேபோல் சூப் வைத்து கொன்றார். இப்படி 6 கொலைகளை மட்டன் சூப்பில் சயனைடு கலந்து யாருக்கும் சந்தேகம் வராத வகையில் கொன்றுள்ளார்.

பின்னர் 2017ல் ஜூலியும், சாஜுவும் திருமணம் செய்து கொண்டனர்.

இந் நிலையில் தாமசின் தம்பி ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்து, சந்தேகபபட்டு போலீசில் புகார் செய்தார்.  போலீசாரின் விசாரணையில் 6 பேரையும்   மட்டன் சூப்பில் சயனைடு கலந்து  கொடுத்து கொலை செய்ததையு ஜூலி ஒத்துக் கொண்டார்.

இதுதொடர்பாக 6 பேரின் சடலங்களை   பிரேத பரிசோதனை செய்த நிலையில், அவர்கள் சயனைடு காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஜூலி, சாஜூ  மேலும் இதற்கு உடந்தையாக இருந்த ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More